குஞ்சுக்குளம் புனித மரியாள் ஆலயத்தில் மின்னிணைப்பு இல்லாது தாம் பெரிதும் அவதிப்படுவதாகவும், ஆலய வழிபாடுகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் மற்றும் பங்குத்தந்தை, வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக அமைச்சரின் 2016 ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் (CBG) இருந்து மின்னிணைப்புக்காக ரூபா.30100இற்கான காசோலை அமைச்சரினால் பங்குத்தந்தையிடம், அமைச்சரின் மன்னார் உப அலுவலகத்தில் வைத்து இன்று (8.7.2016) கையளிக்கப்பட்டது.