குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறிய விமானம்

379
இந்தோனிஷியா நாட்டுக்கு சொந்தமான ராணுவ விமானம் ஒன்று அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்ததில் 39 பேர் வரை பரிதாபமாக பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தோனிஷியா நாட்டிலிருந்து சற்று முன் புறப்பட்ட ராணுவ விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதை விமானிகளில் ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.

உடனே விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே திருப்புமாறு உத்தரவிட, விமானம் உடனடியாக திரும்பியுள்ளது.

ஆனால், தரையை நோக்கி பாய்ந்த் வந்த விமானம் Medan நகரில் உள்ள ஹொட்டல் மீது அசுர வேகத்தில் மோதி பயங்கரமாக வெடித்து சிதறியது.

குடியிருப்பு பகுதிகள் மீது விமானம் விழுந்ததில், சுமார் 39 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் ஹொட்டலில் இருந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கபெறாத நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE