குழந்தைகளின் நலனுக்காக கோடிகளை அள்ளுக் கொடுத்த மெஸ்ஸி

332

 

குழந்தைகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் யூனிசெப் அமைப்புக்கு அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லயனல் மெஸ்ஸி ரூ.3 கோடி நன்கொடை அளித்துள்ளார்.இவர் ஏற்கனவே இந்த அமைப்பின் தூதுவராக இருக்கிறார். இந்த அமைப்பு ஒரு புதிய திட்டத்தை தொடங்கி குழந்தைகளுக்கு தேவையான கல்வி, நல்ல உணவு, உடைகள் போன்றவற்றை வழங்க திட்டமிட்டுள்ளது.’குழந்தைகளுக்கு தேவையானவை’ என்ற அந்த திட்டத்தின் தொடக்க விழா அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடைபெற்றது.

இதில் வாழ்த்து செய்தியுடன் ரூ.3 கோடியே 10 லட்சத்திற்கான காசோலையும் மெஸ்ஸி அனுப்பி வைத்திருந்தார்.

messii

SHARE