குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குப்பை கிடங்கில் குடும்பம் நடத்திய தம்பதியை பொலிசார் கைது செய்தனர். (வீடியோ இணைப்பு)

470
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குப்பை கிடங்கில்  குடும்பம் நடத்திய தம்பதியை பொலிசார் கைது செய்தனர்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குப்பை கிடங்கில் குடும்பம் நடத்திய தம்பதியை பொலிசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் பெரெக்கன்ரிட்ஜ்(Breckenridge) நாட்டில் ஜோ நாக்லெர் (Jo naugler) மற்றும் நிக்கோலி (Nicole) தம்பதி தங்களின் பக்கத்து வீட்டுகாரரை துப்பாக்கி கொண்டு மிரட்டியதாக் பொலிசில்புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர்களை விசாரிக்க வந்த பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர் . அவர்கள் தங்களில் 10 குழந்தைகளுடன் அருகிலுள்ள குப்பை கிடங்கில் தற்காலிக குடிசை

போட்டு வசித்து வருகின்றனர். மேலும் அவர்கள் தங்கள் குழந்தைகளை சிறு வயது முதல் பள்ளிக்கு அனுப்பாமல் தாங்களே வீட்டில் கல்வி கற்று கொடுத்தும் அவர்கள் விருப்பம் போல் வாழும்

விதமாக நாகரிகமற்ற முறையில் வளர்த்து வந்தனர். அவர்களை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர் . குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்களே அவர்களுக்கு கல்வி

கற்று கொடுத்து அவர்களை பிற மனிதர்கள் தொடர்பில்லாமல் வளர்க்கும் பழக்கும் தற்போது அங்கு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE