கேகாலை மொலகொட பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றின் இளம் பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குறித்த விகாரையின் விகாராதிபதியை நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட இளம் பிக்குவை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம் பிக்கு 3 வருடங்களுக்கு முன்னர் துறவறத்தில் இணைந்து கொண்ட 13 வயதான ஒருவராவார்.
அந்த விகாரையின் பிரிவெனாவில் கல்வி கற்றுவந்த இந்த இளம் பிக்குவை செப்டம்பர் 29 முதல் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விகாராதிபதி பல தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.இவ்விடயம் கேகாலை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின ருக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து சந்தேக நபரான விகாராதிபதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.