கொங்கொங் நாட்டில் பொட்டம்மான் கைது! காட்டிக்கொடுத்த உறவினர்?

447

Poddu-ammanதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான்என்று அழைக்கப்படும்சண்முகலிங்கம் சிவசங்கர்  கொங்கொங் நாட்டில் வைத்து கைது செய்யப் பட்டதாக இரகசிய செய்திகள் வெளியாகியுள்ளது.

இவரை பல மாதங்களாக கண்காணித்து வந்ததாகவும், இவரது மனைவி பிள்ளை ஆகியோர் கனடாவில் இருப்பதாகவும் , இவர் கனடா செல்ல இருந்த தருணத்திலேயே கைது செய்ததாக இலங்கை இராணுவ வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் விசேட விமானம் மூலம் பொட்டம்மான் அவர்களை இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவார் என தெரிய வருகின்றது.

இது தொடர்பில் இலங்கை அரசின் எந்த ஊடகங்களும் இது வரை செய்தி எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TPN NEWS

SHARE