கொச்சியில் சொகுசு பங்களா வாங்கும் சச்சின் டெண்டுல்கர்

312
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கேரளாவில் நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களா ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார்.தற்போது ராஜ்யசபா உறுப்பினராகவும், கேரளா பிளாஸ்டர்ஸ் என்ற கால்பந்து அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் உள்ள சச்சின், கேரளா மாநிலம் கொச்சியில் சொகுசு பங்களா வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கொச்சியில் நீர்ப்பரப்பு பின்னால் தெரியும் வகையில் கரையை ஒட்டிய பகுதியில் கட்டப்பட்டுள்ள பங்களாக்களில் ஒன்றை வாங்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சொகுசு பங்களாவில், குடியிருப்பின் மேற்கூரையில் ஒரு நீச்சல் குளம் மற்றும் கடலை ஒட்டிய பகுதியில் அமைந்த முடிவற்ற வகையில் கட்டப்பட்ட மற்றொரு நீச்சல் குளம் என இரு நீச்சல் குளங்கள் உள்ளது.

இங்கு உயர் சக்தி வாய்ந்த இரு ‘சி.சி.டி.வி’ கண்காணிப்பு ‘கமெராக்கள்’ பொருத்தப்பட்டுள்ளன.

பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் வீடியோ போன் மற்றும் 24 மணிநேர பாதுகாப்பு உள்ளது.

மேலும், ஒவ்வொரு பங்களாவில் இருந்து மற்றொரு பங்களாவுக்கு தொடர்பு கொள்ள இண்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சச்சின் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

SHARE