கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வழங்கப்பட்ட ஓர் விருது…..
யுத்தம் மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பும், ஊடக தெழிற்சங்க சம்மேளனமும் இணைந்து ஊடகவியலாளர்களுக்கும், சிவில் அமைப்புக்களுக்கும், விருது வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (21) மாலை நடைபெற்றது.
இதன்போது தமிழ் மொழி மூலம் பத்திரிகை வாயிலாக யுத்தத்திற்குப் பின்னர் பெண்கள் எதிர் கொள்ளும் இன்னல்கள் தொடர்பில் கருத்துக்களையும், தகவல்களையும், செய்தி மற்றும் கட்டுரை மூலமாக வெளியிட்டு வந்த வடக்கு,கிழக்கு உற்பாட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்ளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-அந்த வகையில் வடமாகாணத்தில் மன்னாரில் இருந்து செயற்படும், சுயாதீன ஊடகவியலாளர் என்ற வகையில் எஸ்.ஆர்.லெம்பேட் ஆகிய எனக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.சந்தர்ப்பத்திற்கு நன்றிகள்…