கோஹ்லி- அனுஷ்கா திருமணம்? வெளியான பத்திரிக்கையால் பரபரப்பு

330

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான பத்திரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோஹ்லி, அனுஷ்கா சர்மாவை நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்த நிலையில் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியது. ஆனால் இந்த தகவலை அனுஷ்கா சர்மா மறுத்திருந்தார்.

இதற்கிடையில் இருவரும் ஜனவரி 23ம் திகதி திருமணம் செய்து கொள்ளப் போவதாக திருமணப் பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

ஆனால் அவர்களிடம் இருந்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், இதன் நம்பகத் தன்மை குறித்து கேள்வி எழும்பியது.

அதில் கோஹ்லியின் பெற்றோர் பெயர் சர்பி கோஹ்லி, அருண் கோஹ்லி என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கோஹ்லியின் அம்மா பெயர் சரோஜ் கோஹ்லி, அப்பா பெயர் பிரேம் கோஹ்லி.

அதே போல் அனுஷ்கா சர்மாவின் பெற்றோர் பெயர்கள் அஜய் குமார், ஆஷிமா என்பதற்கு பதிலாக நிலிமா, மேஜர் அருண் சிங் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பை தாஜ் ஹொட்டலில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்த பத்திரிக்கை பதிவேற்றப்பட்ட சில மணி நேரத்தில் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது ரசிகர்களின் வேலையாக கூட இருக்கலாம்.

SHARE