சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 மீனவர்கள் கைது

290

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட  23 இலங்கை மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்படை வலயத்தில் பணியாற்றும் கடற்படை குழுவினரால் சம்பூர் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.

குறித்த மீனவர்கள் மீது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்போது மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட 03 படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட 03 வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்துள்ளதுடன், சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது.

SHARE