சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அப்ரிடி

370

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஆட்டக்காரர் சாகித் அப்ரிடி, டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 2010ம் ஆண்டு டெஸ்டிலும், இரு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் போட்டியில் இருந்தும் அப்ரிடி ஓய்வு பெற்றார். இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக 35 வயதான அப்ரிடி கருத்து வெளியிடுகையில், ‘அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டு விடுவேன். இத்துடன் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நிறைவு பெற்று விடும். ஆனாலும் இங்கிலாந்தில் கவுண்டி போட்டியிலும் இன்னும் சில டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையை மறக்க முடியாத நினைவுகளுடன் முடிக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 6வது டி20 உலகக்கிண்ணப் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முகப்பு Print Send Feedback Share/Bookmark பிந்திய 10 செய்திகள் ஐபிஎல் 8: ரசிகர்கள் அதிகம் விரும்பும் அப்டிரி, சங்கக்காரா ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் தொடரும் அவுஸ்திரேலியா, இலங்கை சென்னை மண்ணை கவ்வினாலும் புதிய சாதனை படைத்தார் ரெய்னா மெஸ்சிக்கு இரண்டாவது மகன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அப்ரிடி உத்தப்பா அதிரடியில் பழி தீர்த்த கொல்கத்தா: 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த சென்னை (வீடியோ இணைப்பு) 12 வயதிலே சச்சின் சாதனையை ஊதித்தள்ளிய சர்பராஸ்கான் முகமது ஹபீஸ் இரட்டை சதம்: வங்கதேசத்திற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் உலகசாதனை படைத்த ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்ல் சர்பராஸ்கானுக்கு கும்பிடு போட்டு வரவேற்ற கோஹ்லி

SHARE