சூட்கேசில் ஒளிந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்ற மனிதர் – புத்திசாலித்தனமாக கண்டுபிடித்த நாய்

543
பெரு நாட்டில் சூட்கேசில் மறைந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்றவரை மோப்ப நாய் கண்டுபிடித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஜோர்ஜ் சாவெஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.

அங்கு பாரிய சூர்கேசுடன் ஒரு நபர் வித்தியாசமாக நடந்து வந்துள்ளார். மேலும் அங்கிருந்த மோப்பநாய் அவரது சூட்கேசை மோப்பம் பிடித்தபடி இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவரை சூட்கேசை திறந்து காண்பிக்கும்மாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர் சூட்கேசை திறந்தபோது அதனுள் ஒரு மனிதர் இருப்பதை கண்டு பாதுகாப்பு ஊழியர்கள்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் பெரு நாட்டில் இருந்து வெளியேறுவதற்காக சூட்கேசில் மறைந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனினும் அவர்களது விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதனிடையே இந்த சம்பவத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

SHARE