சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்

322

 

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்

chennai

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னையில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என்றும், இந்திய வானிலை மையத்தின் ஆய்வின்படி கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் 16 செ.மீட்டரும், குடவாசல், பாபநாசத்தில் தலா 13 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE