சென்னை மண்ணை கவ்வினாலும் புதிய சாதனை படைத்தார் ரெய்னா

363
 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் 3,500 ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 2 ஓட்டங்கள் எடுத்த போது இந்த சாதனையை படைத்தார்.

மேலும் இந்த இலக்கை எட்டும் முதல் வீரர் ரெய்னா மட்டுமே. இவர் இதுவரை 123 போட்டிகளில் 3,506 ஓட்டங்கள் (1 சதம், 24 அரைசதம்) எடுத்துள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா 3,147 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

அதே போல் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணித்தலைவர் கவுதம் கம்பீர், 3000 ஓட்டங்களை எட்டினார். இதுவரை 111 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 3,015 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

SHARE