ஜனாதிபதி தலைமையில் யாழ். பொலிஸ் நிலைய கட்டிடம் திறப்பு

273

 

 

ஜனாதிபதி தலைமையில் யாழ். பொலிஸ் நிலைய கட்டிடம் திறப்பு

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலைய கட்டிடம் இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, அங்கு மூன்று நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

காலை முதல் நிகழ்வாக யாழ். சுப்ரமணியம் பூங்காவில் இடம்பெறும் போதை ஒழிப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி, அதனை தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

குறித்த நிகழ்வினை அடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத் தொகுதியையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வுகளில், அமைச்சர் சாகல ரட்ணாயக்க, இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜசுந்தர உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

unnamed-1 unnamed-2 unnamed-3 unnamed-4 unnamed-5 unnamed-6 unnamed-7 unnamed-8

SHARE