ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இன்று தாய்லாந்தை சென்றடைந்தனர்.

732

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இன்று தாய்லாந்தை சென்றடைந்தனர்.

 

இன்று மதியம் பேங்கொங் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்டோர் சென்றடைந்துள்ளனர்.

ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் தூதுக்குழுவினரை தாய்லாந்து கலாச்சார அமைச்சர் வீரா ரொப்போஜ்சனரத் மற்றும் தாய்லாந்துக்கான இலங்கையின் தூதுவர் சேனுகா செனவிரட்ன ஆகியோர் வரவேற்றனர்.

மேலும், ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் தாய்லாந்து படையினரின் அணி வகுப்பு மரியாதை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

SHARE