ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

356

ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒட்டம் பிடித்தனர்.

இங்கு 6.9 ரிக்டர் ஆக நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இவாட் மாகாணத்தில் கடலுக்கு அடியில் 10 கி.மீட்டர் (6 மைல்) ஆழத்தில் அது உருவாகியுள்ளது. இதனால் கடலில் வழக்கத்துக்கு மாறாக அலைகள் உயரமாக எழும்பின. நிலநடுக்கம் ஏற்பட்ட 45 நிமிடங்களுக்கு பிறகு 10 செ.மீட்டர் (3.94 இஞ்ச்) அளவுக்கு அலைகள் உருவாகின.

அவை மேலும் 1 மீட்டர் 83 அடி உயரத்துக்கு எழும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது., எனவே ஜப்பான் வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து கடலோரத்தில் தங்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். உடனே அங்குள்ள மக்கள் குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களை தேடி கூட்டம் கூட்டமாக புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலநடுக்கம் 690 கி.மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் டோக்கியோவிலும் உணரப்பட்டது. எனவே நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சேத மதிப்பு அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சேத விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் இதே பகுதியில் நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டது

SHARE