ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெங்காலி மொழியில் ஓடியொ மெசேஜ் ஒன்றை பதிவேற்றியுள்ளது. |
தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி பல்வேறு கொடூர செயல்களை அரங்கேற்றி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, பெங்காலி மொழியில் “கலிஃபேட் இஸ் பேக்” என்ற தலைப்பில் ஓடியோ மெசேஜ் ஒன்றை பதிவேற்றியுள்ளது.
அதில், ஜிஹாதில் இணையுங்கள், வெற்றி இல்லாவிடினும் தியாகம் எய்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பெங்காலி மொழி பேசுபவர்கள் அதிகம் இருப்பதால், எந்தவித அசாம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஓடியோ வங்கதேச இளைஞர்களை குறிவைத்தாலும், இந்தியாவை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார். |