ஜூலை 1ம் தேதி முதல் ரஷ்ய அதிபர் புடின் மாயம்.. வரிசையாக நிகழ்ச்சிகள் ரத்து.. மர்மம் நீடிப்பு மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொடர்ந்து தனது கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை ரத்து செய்து வருகிறார். கடந்த ஜூலை 1ம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காததால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்து வருபவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று என்பதாலும், அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டாலும், புடினை சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளன. புடினின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உலக ஊடகங்கள் செய்தியாக்கிக் கொண்டுள்ளன. அப்படிப்பட்ட நபர் திடீரென மாயமானால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காதல்லவா.