டி 20 போட்டி: இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

353
மோசமான துடுப்பாட்டத்தால் தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி 20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது அணித்தலைவர் என்று ரஹானே கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் டி20 தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 2-வது மற்றும் கடைசி போட்டி இன்று மாலை நடைபெற்றது.இதில் ஜிம்பாப்வே அணி இந்தியாவை 10 வித்தியாசத்தில் வென்றது.

இந்த தோல்வி பற்றி இந்திய அணியின் அணித்தலைவர் ரஹானே கூறியதாவது, ”எங்கள் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு அவர்களை கட்டுப்படுத்தினார்கள்.

முக்கியமாக கடைசி 5 ஒவர்களில் அவர்களின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் எங்கள் துடுப்பாட்டம் சிறப்பாக இல்லை.

நாங்கள் தொடர்ந்து விக்கெட்களை இழந்தப்படி இருந்ததால் வேகமாக ஓட்டங்கள் குவிக்க முடியாமல் போய்விட்டது. பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய இரண்டிலும் ஜிம்பாப்வே அணி மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை மறுக்க முடியாது.

அதேசமயம் ஒட்டு மொத்தமாக இந்த தொடரில் இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

SHARE