டெல்லியை பந்தாடிய சென்னை அணி: ரசிகர்களோடு கண்டுகளித்த டோனி

295
ஐஎஸ்எல் காaல்பந்து தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் சென்னையின் எப்சி-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின.சென்னை அணி 4-3-3 என்ற பார்மட்டிலும், டெல்லி அணி 4-4-1-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின.

சென்னை அணி 17வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. நட்சத்திர வீரர் மெண்டோஸா இந்த கோலை அடித்தார்.

அடுத்த 4வது நிமிடத்தில் பெலிஷாரி தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். 40வது நிமிடத்தில் ஜிஜி அடித்த கோலால் சென்னை அணி முதல் பாதியில் 3-0 என முன்னிலை வகித்தது.

2வது பாதியிலும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியது. 54வது நிமிடத்தில் சென்னை அணி 4வது கோலை அடித்தது. இந்த கோலை ஜிஜி அடித்தார். டெல்லி அணியால் கடைசி வரை போராடியும் பதில் கோல் அடிக்க முடியவில்லை.

இந்த வெற்றியால் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது. 5 ஆட்டத்தில் வெற்றி பெற் றுள்ள சென்னை அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்த போட்டியை கண்டுகளிக்க ஏராளமான ரசிர்கள் குவிந்தனர், இந்த ரசிகர்களுடன் ரசிகர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் டோனியும் இதனை கண்டுரசித்தார்.

SHARE