டோனி எனது ரோல் மொடல்: சொல்கிறார் புதுமுக வீரர் குருகீரட் சிங்

336
இந்திய அணித்தலைவர் டோனி எனது ரோல் மொடல் என்று புதுமுக சகலதுறை வீரர் குருகீரட் சிங் தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் புதுமுக வீரர் குருகீரட் சிங் மற்றும் எஸ். அரவிந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இது பற்றி பஞ்சாப்பின் 25 வயதான சகலதுறை வீரர் குருகீரட் சிங் கூறுகையில், “இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிலும் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து விளையாடுவது அதிர்ஷ்டமானது. ஏற்கனவே அவருடன் பஞ்சாப் அணியில் ஆடி இருக்கிறேன். அவர் எனக்கு பல்வேறு வகைகளில் உதவி இருக்கிறார்.

மேலும், நான் இந்திய அணித்தலைவர் டோனியின் துடுப்பாட்ட ஸ்டைலை பின்பற்றி விளையாடி வருகிறேன். அவர் தான் எனது ரோல் மொடல்.

அவருடன் இணைந்து சக வீரர்கள் அறையில் இருப்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் இந்திய அணியில் இடம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள புதுமுக வீரர் எஸ்.அரவிந்த், ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.

SHARE