தங்கொட்டுவயில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு – சீ.ஐ.டி விசாரணை தீவிரம்

272
தங்கொட்டுவயில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு – சீ.ஐ.டி விசாரணை தீவிரம்
சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில் எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பெரும்பாலும் வேனில் ஏற்பட்ட தீ காரணமாக இவர்கள் அனைவரும் எரியுண்டு இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • தங்கொட்டுவ  விவகாரம் –  சீ.ஐ.டி விசாரணை
தங்கொட்டுவை பிரதேசத்தில் வான் ஒன்றுக்குள் எரியூட்டப்பட்ட நிலையில் 5 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில், பாதால உலகக் கோஷ்டியினரின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகின்ற நிலையில், பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் ஆலோசனைக்கு அமைய, இந்த விசாரணைகள் சீ.ஐ.டீ.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
SHARE