தசையை உண்ணும் பூச்சி – ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களே காரணம்.

321

 

Sereja

சிரி­யா­ முழுவதும் மனித தசையை உண்ணும் பூச்சி வகை­யொன்று பரவி வரு­வதாகவும், அதற்கு ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களே பொறுப்பு எனவும் அந்­நாட்­டி­லுள்ள குர்திஷ் செம்­பிறைச் சங்கம் தெரி­விக்கிறது.

கடந்த 12 மாத காலப் பகு­தியில் சிரி­யாவில் மேற்­படி தசை உண்ணும் “லெஷ்­மா­னியா” பூச்­சியால் பாதிக்­கப்­பட்ட 500 பேருக்கும் அதி­க­மானோர் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் அப்­பாவி பொது­மக்­களை கொன்று அவர்­க­ளது சட­லங்­களை வீதியில் கைவிட்டு சென்­ற­மையே மேற்­படி பூச்­சியால் ஏற்படும் லெஷ்­மா­னி­யாஸிஸ் நோய் பர­வி­ய­மைக்கு காரணம் என குர்திஷ் செம்­பிறைச் சங்­கத்தைச் சேர்ந்த தில்காஷ் இஸா தெரி­வித்துள்ளார். வீதியில் கைவி­டப்­பட்­டி­ருந்த அழு­கிய சட­லங்கள் மூல­மா­கவே அந்த பூச்சி உரு­வாகி பரவி வரு­வ­தாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE