தமிழ்த் தேசிய அடையாளத்தோடு நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா

345
ஜேர்மனியின் தலைநகரில் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த இவ் விளையாட்டு விழாவில் வெளிவாரியான மாணவர்களையும் உள்ளடக்கிய பேர்லின் தமிழாலயத்தின் இல்லங்களுக்கு இடையான மெய்வல்லுனர் போட்டி , 13 வயது – 16 வயது , மேற்பிரிவு ஆகியவர்களுக்கான உதைப்பந்தாட்டம் , மென்பந்து துடுப்பாட்டம் , கயிறு இழுத்தல் என பல்வேறு விளையாட்டுக்கள் சிறப்பாக நடைபெற்றது.இந்த தமிழர் விளையாட்டு விழாவில் நூற்றுக்கணக்கான மக்களும் கலந்துகொண்டு தமது பிள்ளைகளை ஊக்கிவித்தது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்ததோடு , இப் போட்டியில் பங்குபெற்ற விளையாட்டு வீரர்கள் /வீராங்கனைகள் அனைவரும் மிக திறமையானவர்களாக திகழ்ந்தார்கள்.

இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் ,கழகங்களுக்கும் சான்றிதள்களும் பதக்கங்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு யேர்மனியின் தலைநகரத்தில் தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

SHARE