தினேஷ் கார்த்திக்கின் முன்னாள் மனைவியை மணந்த முரளி விஜய்!

288

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நொடிப் பொழுதில் அனைத்தையும் மாற்றிவிடும்.

அந்த நிகழ்வுகள் தமிழக கிரிக்கெட் வீரர்களான முரளிவிஜய், தினேஷ் கார்த்திக் வாழ்க்கையில் நடந்தது.

தற்போது இருவரும் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். முரளி விஜய் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளார்.

இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் முதல்தரப் போட்டிகளில் விளையாடும் போது இருவரும் சிறந்த நண்பர்களாகவே இருந்தனர். ஆனால் அதன் பிறகு ஐபிஎல் போட்டியில் நடந்த சம்பவம் இருவருக்கும் மனகசப்பை ஏற்படுத்தி விட்டது.

கடந்த 2007ம் ஆண்டு தினேஷ் கார்த்திக், நிகிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2012ம் ஆண்டு ஐபிஎல்-5வது சீசனின் போது நிகிதா முரளிவிஜயை சந்தித்திருக்கிறார்.

இவர்களது சந்திப்பு காதலில் முடிய, அதன் மூலம் அவர் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த தினேஷ் கார்த்திக் நிகிதாவை விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் முரளிவிஜய்யும் நிகிதாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தால் தினேஷ் கார்த்திக் மனதளவில் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் சில காலம் பாதிக்கப்பட்டது.

பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த தினேஷ் கார்த்திக், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை காதலித்து மணந்து கொண்டார்.

இவர்களது திருமணம் சென்னையில் இந்த ஆண்டு ஓகஸ்ட் 18ம் திகதி நடந்தது.

சமீபத்தில் முரளிவிஜய் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்.

“நான் எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. அதன் பிறகு எதையும் பற்றி பேசும் நிலையில் நான் இல்லை. சில விடயங்கள் தவறாக முடிந்து விட்டது.

நான் இந்த விடயத்தை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். இது 3 பேரை சமந்தப்பட்டது. நாங்கள் இந்த பிரச்சனையை சிறப்பாக முடிந்து கொண்டோம் என்று நினைக்கிறேன்.

இந்த விவகாரம் பற்றி மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

முன்னதாக முரளிவிஜய்- தினேஷ் கார்த்திக் திருமண விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. எது எப்படியாகினும் அவர்களின் தனிபட்ட வாழ்க்கைக்கும் மரியாதை கொடுப்பதே சிறந்ததாக இருக்கக்கூடும்.

SHARE