தியாகதீபம் திலீபன் ஞாபகார்த்தநினைவு நிகழ்வு நாளை கிளிநொச்சியில் ஏற்பாடு

260

 

தியாகதீபம்  நினைவுநாள் நிகழ்வு நாளை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியும், ஜனநாயக போராளிகள் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Lieutenant Colonel Thileepan with National Leader
Lieutenant Colonel Thileepan with National Leader
 நாளை ஞாயிற்று கிழமை காலை 10 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று முந்தினம் யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவு தூபியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 குறித்த நினைவேந்தல் நிகழ்வு நாளை கிளிநொச்சியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், தமிழர் விடுதலை கூட்டணியும் ஜனநாயக போராளிகள் கட்சியும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிட தக்கதாகும். குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள், பிரதேச மக்கள், ஆகியோரை கலந்து கொள்ளுமாறும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
SHARE