துபாயில் உலக கல்வி மகாநாடு – இலங்கையின் சார்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் பங்கேற்பு

548

உலக கல்வி மகாநாடு (07.08) டுபாய் நாட்டில் நடைபெற்றது. இதில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இலங்கையின் சார்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார். இம் மகாநாட்டிற்கு டுபாய் நாட்டின் கல்வி அமைச்சர் அப்துல்லா கரம் தலைமை தாங்கினார். இங்கு உலக கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஆராயபட்டது.

இதன் போது கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் டுபாய் நாட்டின் கல்வி அமைச்சர் அப்துல்லா, கரம் ஆகியோர் இணைந்து அவருக்கான நினைவுப் பரிசு ஒன்றினை வழங்கினர். இதன போது இலங்கை கல்வி நிலை தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் சிறப்பு உரை ஒன்றினை நிகழ்த்தினார்.

படங்களும் தகவலும்:-  பா.திருஞானம் 

dcd454cb-e283-405a-82d3-c7079db1a9f0

2709eb23-c408-4a51-a387-ab0785c420dd

7c6d3911-b7d3-4c44-aeb0-416258fdc313

SHARE