துப்பாக்கிச்சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன்: வாசிம் அக்ரம் பேட்டி (வீடியோ இணைப்பு)

339
துப்பாக்கி சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.ராச்சியில் நேஷனல் மைதானத்தில் இருந்து காரில் தன் வீட்டுக்கு வாசிம் அக்ரம் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இந்தக் கொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார். ஆனால் கொலை முயற்சிக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.

இந்த தாக்குதல் குறித்து அக்ரம் கூறுகையில், எனது கார் மீது ஒரு கார் மோதியது. தப்பிக்க முயற்சித்த அந்த காரை நான் தடுத்து நிறுத்தினேன்.

அப்போது அதில் இருந்து இறங்கிய நபர் திடீரென துப்பாக்கியால் எனது காரை நோக்கி சுட்டார். தொடர்ந்து என்னை நோக்கியும் சுட ஆரம்பித்தார்.

நான் அதிர்ஷ்டவசமாக தப்பினேன். இதுவரை எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தவித மிரட்டலும் வந்தது கிடையாது. என்னை நோக்கி சுட்டது யார் என்பதை பொலிசார் தான் கண்டுப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

SHARE