தெலுங்கானாவில் தடகள வீரர் ஒருவரின் 7 மாத கர்ப்பிணி மனைவி சுகப்பிரசவத்துக்காக தினமும் 5 கி.மீ தூரம் ஓடுவது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

335

 

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த ரவீந்திரர் தேசிய அளவில் பல பதக்கங்களை வென்ற ஒரு தடகள வீரர். இவரது மனைவி லட்சுமி (42).ஏற்கனவே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், லட்சுமி மீண்டும் கர்ப்பம் தரித்து தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் இவர் சுகப்பிரசவத்துக்காக தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறார்.

இதுபற்றி லட்சமி கூறுகையில், எனது கணவர் ஓட்டப் பந்தய வீரர் என்பதால் அவர் மூலம் நானும் தினமும் ஓடி வருகிறேன்.

எனக்கு முதல் குழந்தை உண்டான போது தினமும் ஓடுவேன், அதனால் சுகப்பிரசவம் ஏற்பட்டது.

இப்போது 2–வது குழந்தையும் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கணவருடன் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி வருகிறேன்.

இதுபற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, அவர்கள் உங்களால் முடிந்தால் முயற்சி செய்யுங்கள் என்றதால் ஓட்டப்பயிற்சியை விடாமல் செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், லட்சுமி நேற்று உலக மகளிர் தினத்தையொட்டி உஜ்வல பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தையை தூக்கிக் கொண்டு 80 படிகள் ஏறி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

SHARE