தேசிய தமிழ் மொழி தினம் ஒக்டோபர் 23 கண்டியில் நடைபெருவது தொடர்பான கலந்துறையடல் கண்டியில்

267

 

தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையில் தமிழ் மொழி சம்பந்தமான போட்டிகள் வலய மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசிய தமிழ் மொழித்தின கண்டி மாநகரில் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதன்படி தேசிய தமிழ் மொழித்தின விழா ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி; கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஏற்பாடுகள குறித்தும் மாகாணத்திற்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று (16) கண்டியில் நடைபெற்றது

இந் நினழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளரகள், மாகாண கல்வி பனிப்பளர், மாகாண மேலதிக கல்வி பனிப்பாளர், அமைச்சரின் செயலாளரகள், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டணர்.

இதன் படி தேசிய தமிழ் மொழி தினத்தன்று (ஒக்டோபர் 23) காலையில் மாபெரும் கலாசார ஊர்வலம் ஒன்று கண்டி நகரில் நடைபெற உள்ளது. இதில் சகல மாகாணங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் நடைபெறுவதுடன் அந்தந்த பிரதேசங்ளுக்குறிய பண்பாட்டு நிகழ்வுகளும் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இதில் உலகளாவிய கலைஞர்களினதும் புத்திஜீவிகளினதும் சொற்பொழிவுகளும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.; ஜனாதிபதி அவர்கள் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொள்ள உள்ளார். ஒன்பது மாகாணங்களினதும் முதல் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

unnamed-11 unnamed-12 unnamed-13 unnamed-14 unnamed-15

SHARE