உள்ளூராட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி தலவாகலை பிரதான பஸ் தரிப்பிடத்தில் ஆர்பாட்டமொன்று 03.04.2016 நடைபெற்றது
தலவாகலை லிந்துளை நகரசபை ஊழீயர்களினால் மேற்படி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தலையில் கருப்பு பட்டிணிந்திருந்ததுடன் கருப்பு ஆடைகளும் அணிந்திருந்தனர்
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் அவ்வாறு இலையொனில் நடைமுறையில் இருந்தவாறு எம்மை பணி செய்ய அனுமதிக்கவேண்டும் நாங்கள் சம்பளம் வாங்காமல் பணி புரிய தயார் என்றனர் மேலும் ஆர்பாட்டத்தின் போது தேர்தலை உடன் ஆரம்பிக்க கோரி கையொழுத்து வேட்டையும் இடம்பெற்றதுடன் மகஜரில் கையொழுத்திட்டவர்களுக்கும் கருப்பு பட்டி அணிவிக்கப்பட்டது கையொழுத்து பெறப்பட்ட மகஜரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கையளிக்கவுள்ளதாகவும் ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்