தொழில்தருனரால் துன்புறுத்தப்பட்டதை அடுத்து, சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கை பணிப்பெண் ஒருவர் கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை…

372
சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கை பணிப்பெண் ஒருவர் கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்தருனரால் துன்புறுத்தப்பட்டதை அடுத்தே அவர் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டார்.
அவர் மரணிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னாள், இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய அவர், தாம் தமது எஜமானால் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.இந்த நிலையில் குறித்த பெண்ணின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவர உதவுமாறு அவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக எமது செய்திப்பிரிவு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனையை தொடர்பு கொண்ட போது, இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் பூதவுடலை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.�

SHARE