நடிகை ஐஸ்வர்யாராயை விமான நிலையத்தில் ரசிகர்கள் முற்றுகையிட்டனர்.

324

 

நடிகை ஐஸ்வர்யாராயை விமான நிலையத்தில் ரசிகர்கள் முற்றுகையிட்டனர். தள்ளுமுள்ளுவில் அவரது தாய் கீழே விழுந்தார். மகளுக்கு அடிபட்டது.

isvareja

லண்டனில் ஓய்வு
நடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆராத்யா, தாய் விருந்தா ராய் ஆகியோருடன் ஓய்வுக்காக லண்டன் சென்று இருந்தார். அங்கு சில வாரங்கள் தங்கி இருந்து விட்டு இந்தியா திரும்பினார். ஐஸ்வர்யாராய் விமான நிலையத்துக்கு வரும்போதெல்லாம் அவரை காண ரசிகர்கள் திரள்வது உண்டு. விமானநிலையத்தில் காத்திருக்கும் இதர பயணிகளும் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்டு நச்சரிப்பார்கள்.

இதனால் அவரது பாதுகாப்புக்காக விமான நிலையத்தில் ‘பாடிகார்ட்’களை நிறுத்தி வைப்பார்கள். இதுபோல் லண்டனில் இருந்த வந்த ஐஸ்வர்யாராயின் பாதுகாப்புக்காக ‘பாடிகார்ட்’கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மும்பை விமான நிலையத்தில் தயாராக நின்று கொண்டு இருந்தனர். ஐஸ்வர்யாராய் விமானத்தில் இருந்து இறங்கி வந்ததும் ‘பாடிகார்ட்’கள் சூழ்ந்து கொண்டு காரை நோக்கி அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

ரசிகர்கள் முற்றுகை
ஐஸ்வர்யாராயை பார்த்ததும் ரசிகர்களும் பயணிகளும் ஓடோடி வந்து அவரை முற்றுகையிட்டனர். போட்டோகிராபர்களும் சூழ்ந்து கொண்டு போட்டோ எடுத்தார்கள். காருக்கு அருகில் சென்றதும் பாதுகாவலர்கள், ரசிகர்களையும் போட்டோகிராபர்களையும் தள்ளி விட்டனர். இதில் ஒருவர் தடுமாறி ஐஸ்வர்யாராயின் தாய் விருந்தாராய் மீது விழுந்தார். இதனால் விருந்தாராய் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு அடிபட்டு அலறினார்.

மகள் ஆராத்யாவை காரின் பின்சீட்டில் உட்கார வைத்துக் கொண்டு இருந்த ஐஸ்வர்யாராய் தாயின் அலறல் கேட்டு திரும்பி பார்த்தார். கீழே அவர் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியாகி அருகில் செல்வதற்காக கார் கதவை சாத்தினார். அந்த கதவு மகளின் தலையில் அடித்து வலியால் அந்த குழந்தை ஓ வென்று கத்தி அழுதது. தாய், குழந்தை இருவரையும் மாறி மாறி பார்த்து சில நொடிகள் தடுமாறிய அவர் பின்னர் குழந்தையின் தலையை தேய்த்து விட்டுக் கொண்டு பின்னால் திரும்பி என் அம்மாவை தள்ளி விட்டது யார் என்று ஆவேசமாக கத்தினார்.

பரபரப்பு
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஐஸ்வர்யாராய் கோபத்தை பார்த்து அதிர்ச்சியான கூட்டத்தினர் அங்கிருந்து விலகி சென்றனர். பாதுகாவலர்கள் அவரது தாயை தூக்கி விட்டனர். தாயை அழைத்துக் கொண்டு ஐஸ்வர்யாராய் மின்னல் வேகத்தில் காரில் ஏறி சென்று விட்டார்.

SHARE