நல்லெண்ண விஜயமாக அமெரிக்க கடற்படை கப்பல் “யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள்” இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதன் போது அமெரிக்க கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
இதனையடுத்து “யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள்’ கப்பலின் கேப்டன் ட்ரூ செயின்ட் ஜான் மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.
இதேவேளை, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள “யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள்” எதிர்வரும் முதலாம் திகதி தனது பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
மேலும், குறித்த கப்பலில் வருகை தந்துள்ள குழுவினர் கிரிக்கெட், பேஸ்பால் மற்றும் கூடைப்பந்து என பல விளையாட்டுகள் போட்டிகளில் இலங்கை கடற்படையினருன் இணைந்து விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
advertisement