நாளை மதுபான சாலைகளுக்கு பூட்டு

272

சர்வதேச தொழிலாளர் தினமான, நாளை ஞாயிற்றுக்கிழமை மே 1ஆம் திகதியன்று, மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

மே தினக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் மாவட்டங்களிலேயே மேற்படி கடையடைப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்திலும் காலி மற்றும் நுவரெலியா நகர சபை அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகளே மூடப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE