நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்காவிட்டால் மகிந்தவின் தோல்வி உறுதி:

409
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை செயற்படுத்தாது போனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் தீர்மானத்தை மாற்ற போவதில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு முத்தையா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சிக்கு வருவார்கள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்காது தேர்தலை நடத்தினால் அவரை தோற்கடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE