நுவரெலியா பதுளை பிரதான பாதையில் ஹக்கலை பிரதேசத்தில் கன ரக கொள்கலன் ஒன்று பதுளை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பாதையை விட்டு விலகி சேதத்திற்கு உள்ளானது. குறித்த வீட்டிற்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் மின்கம்பம் ஒன்றும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சாரதியின் தூக்கமே காரணம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை ஹக்கலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.