நேபாளத்திற்கு இலங்கை உதவிக்குழு

328

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பூமி அதிர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இலங்கையிலிருந்து உதவிக்குழு ஒன்றை அனுப்பி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய இன்றைய தினம் உதவிக்குழுவினர் காத்மண்டு நோக்கி பயணமாவர்.

இந்த குழுவில் மீட்பு பிரிவு , மருத்துவ பிரிவு மற்றும் நிவாரண உதவிப் பிரிவு ஆகியன உகள்ளடங்கியுள்ளன. அத்துடன் இக்குழுவினர் நிவாரணப் பொருட்களையும் கொண்டு செல்லவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேபாளத்திற்கு தங்களால் என்ன உதவிகளை வழங்க முடியுமோ அந்த உதவிகளை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE