நேபாள நாட்டின் விவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் அந்நாட்டு வேளாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஹர் பிரசாத் பரஜுலி பதவி விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

320

 

நேபாள நாட்டின் விவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் அந்நாட்டு வேளாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஹர் பிரசாத் பரஜுலி பதவி விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேளாண்மை அமைச்சர் பரஜூலி, கடந்த செவ்வாய்க் கிழமை நெல் நடவு பருவத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் கலந்து கொண்டபோது, அங்கு இருந்த விவசாய பெண்களிடம் பாலியல் ரீதியாக மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப் படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து பரஜுலியின் செய்தி தொடர்பாளர் சூர்யா தபா, இது வேண்டும் என்றே புனையப்பட்டது, அவருக்கு எதிரான பொது கருத்துக்கள் மற்றும் குற்றச் சாட்டுகளைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார் என்று கூறியுள்ளார்.

SHARE