ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் யெவ்ஜெனி என்ற நோயாளி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது நர்சை தொட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த டாக்டர் நோயாளியை சரமாறியாக அடித்ததில் பலியானார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் பெல்கோர்டு நகரை சேர்ந்தவர் யெவ்ஜெனி வயது(56) இவர் உடல்நலக்குறைவால் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது டாக்டர் இலியா ஷெலந் தினோவ் என்பவரை சந்தித்து சிகிச்சை பெற்றார்.
அதனை தொடர்ந்து யெவ்ஜெனி அங்கு பணியாற்றும் நர்சை தொட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த டாக்டர் நோயாளியை நோக்கி சரமாறியாக குத்தி உள்ளார். இதனால் நோயாளி திடீரென மயங்கி கிழே விழுந்தார். மயங்கி விழுந்த நோயாளியை பரிசோதித்த டாக்டர் இறந்துவிட்டதாக கூறினார். இந்த காட்சிகள் அனைத்தும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ ‘யூடியூப்’பிலும் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டாக்டர் கைது செய்யபட்டார். நோயாளியை தாக்கிய டாக்டருக்கு 2 வருடம் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.