பசில் ராஜபக்ச சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் மாத்தறை பிரதேசத்தில் காணி தொடர்பான விசாரணை செய்வதற்கு வந்திருந்த வேளையில் இந்த கைது இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை இன்று மாலை இவரை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் காணி விடயமாக கைது என்று சொலப் பட்டாலும் இவர் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பல முயற்சிகளை செய்து வருகின்றார் என்று அரசுக்கு தகவல் எட்டியுள்ளது .
பெசில் தற்போதைய சுகாதார அமைச்சர் ராஜிதவின் பாடசாலை நண்பர் .
இருந்த போதிலும் இவர் காணி விடயத்தில் கைது என்பதை விட இந்த அரசைக் கவிழ்ப்பதில் மிகவும் தீவிரமாக அணி சேர்த்து வருகின்றார் என்பதுதான் உண்மை ..
காணி விடயத்தில் கைது என்றால் நூற்றுக்கணக்கான முன்னாள் இந்நாள் அரசியல்வாதிகளை கைது செய்திருக்க வேண்டும்….