பண்ணையில் குதிரை மேய்த்தேன்: வெற்றி ரகசியம் சொன்ன ஜடேஜா

289

பண்ணையில் குதிரைகளுடன் நேரத்தை செலவிட்டது தனக்கு தன்னம்பிக்கையை மீட்க உதவியதாக இந்திய வீரர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

மோசமான பார்ம் காரணமாக வங்கதேச தொடருக்கு பின்னர் ஜடேஜா இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் 4 மாத இடைவெளிக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார். இதற்கு ரஞ்சி கிண்ணத் தொடரில் சிறப்பாக செயல்பட்டது காரணமாக அமைந்தது.

சவுராஷ்டிரா அணியில் விளையாடும் ஜடேஜா 2 போட்டிகளில் 24 விக்கெட்டுகளுடன், 2 அரைசதமும் அடித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜடேஜா, “நான் கடந்த 4 மாதங்களாக கிரிக்கெட்டையே மறந்து விட்டேன்.

ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் புத்துணர்வுடன் களமிறங்க வேண்டும் எனத் திட்டமிட்டு இருந்தேன். இதற்காக எனது பண்ணைக்கு சென்ற நான் அங்கு குதிரைகளுடன் கொஞ்சி விளையாடினேன்.

மேலும், நண்பர்களுடன் ஊர் சுற்றினேன், இசையை ரசித்தேன், கிரிக்கெட் பற்றிய எண்ணத்தை மறந்து விட்டேன். இதுவே ரஞ்சிக் கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட உதவியது” என்று தெரிவித்துள்ளார்.

SHARE