பதான்கோட் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார்.

310

 

பதான்கோட் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார்.

modi-helicopter

கடந்த வாரம் தீவிரவாதிகள் பதான் கோட் விமானப்பட்டை விமான தளத்தில் தாக்குதலில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர் என்றாலும், பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விமானப்படை விமான தளத்தை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பார்வையிட்டார்.

இதையடுத்து இன்று தனி ஹெலிகாப்டர் மூலம் பதான் கோட் செல்லும் நரேந்திர மோடி, அங்கு தாக்குதல் நடைபெற்ற இடங்களைப் பார்வையிடுகிறார். அடுத்து இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவும் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE