பத்திரமாக தரையிறக்கியதற்கு நன்றி – பெண்ணின் நெஞ்சை உருக்கும் கடிதம் 

336
பிரித்தானியாவிலிருந்து விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் விமானிக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.பெத்தனி(Bethanie) என்ற பெண் பிரித்தானியாவிலிருந்து இருந்து ஸ்பெயினுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஸ்பெயினில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் பெத்தனி விமானிக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ஜேர்மன்விங்ஸ் அண்மையில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகி 150 பேர் பலியாகினர்.

எங்களை பத்திரமாக அழைத்து வந்த உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த ரோலர்கோஸ்டர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யும் மனிதர்கள் நாம்.

இது போன்ற சம்பவங்கள் அதிக பொறுப்புள்ள உங்களைப் போன்றவர்களை தான் அதிகம் பாதிக்கும் என்பது புரிகிறது. என்னை பத்திரமாக அழைத்து வந்ததற்கு நன்றி. பாதுகாப்பாக அழைத்து வந்ததற்கு நன்றி.

ஸ்பெயினில் நான் வாழும் வாழ்க்கையை தொடரவும், பிரித்தானியாவில் உள்ள என் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்கவும் உதவியதற்கு நன்றி.

என் குடும்பத்தாரை மீண்டும் பார்க்க வைத்ததில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். விரைவில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரை சந்திப்பீர்கள் என்று நம்புகிறேன்.

எனது விமான பயணம் அருமையாக இருந்தது. உங்களுக்கும் அவ்வாறே இருக்கட்டும். இன்று இரவு நான் புன்னகை புரிய நீங்கள் தான் காரணம் என கூறியுள்ளார்.

இந்த கடிதத்தை பிரித்தானியாவில் வசிக்கும் விமானி ஜெய் தில்லன்(Jai thillan) என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

SHARE