பந்துவீச்சில் என்னை மிரட்டிய ஜாகீர்கான், சுவான்: சொல்கிறார் சங்கக்காரா

339
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜாகீர்கான், சுவான் பந்துவீச்சை சமாளிக்க சிரமப்பட்டதாக ஓய்வு பெற்ற குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான குமார் சங்கக்காரா ஓய்வு பெற்றார்.இந்நிலையில் பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கடைசி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் எனக்கு சவாலாக இருந்தார்.

அதே சமயம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜாகீர்கான் (இந்தியா), சுவான் (இங்கிலாந்து) ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்வது எனக்கு சவாலான விடயமாக இருந்தது.

இவர்களது பந்துவீச்சில் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சங்கக்காரா 11 இரட்டை சதம் அடித்துள்ளார். மேலும் ஒரு இரட்டை சதம் அடித்து பிராட்மேன் (12 இரட்டைசதம்) சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு கடைசி டெஸ்ட் ஏமாற்றத்தில் முடிந்தது.

அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் பற்றி கூறுகையில், “கிரிக்கெட் சகாப்தத்தில் அவர்தான் சிறந்த வீரர். அவருடன் யாரையும் ஒப்பிட இயலாது.

பிராட்மேன் துடுப்பாட்டத்தை நான் வீடியோவில் பார்த்து இருக்கிறேன். அவர் ஒரு அபூர்வமான வீரர்” என்று கூறியுள்ளார்.

SHARE