பர்மாவில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றனர்…. உலகநாடுகள் நிலைப்பாடு என்ன என்று புரியாமல் உள்ளதாக சமூக வலைத் தளங்கள் கூறுகின்றன பர்மாவில் பல்வேறு பட்ட மனித உரிமை மீறல்கள் எல்லாம் நடந்தாலும் அவை ஏக காலத்தில் வெளி வருவது என்பது மிக மிக குறைவு இங்கு ஆட்சியில் கூட ஜனநாயகம் அற்ற தளர்வு நிலை. நவீன கலங்களுக்குள் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் ஆதி காலம் போன்று மிருகத் தனமாக மனித உயிர்கள் பிரிக்கப் படுவது மிகவும் பிற்பட்ட சமூகமாக மனித இனத்தைக் காட்டுவதாக உணரக் கூடியதாக உள்ளது. நடப்பு உலகில் மனித குலத்தின் மீது பாரிய சவால் எழுந்துள்ளது இதனை எப்படி மனித இனம் வெல்லும் என்பதில் பாரிய சவால்கள் உள்ளது. காரணம் மனிதன் மனிதனாக இல்லை, மன அமைதி இல்லை, ஆலய தரிசிப்பு இல்லை, வேலை….. வேலை….. பணம்…. பணம்….. இப்படியான சூழல் மனிதனுக்கு மன அமைதியை வழங்குமா..? நிச்சயமாக இல்லை. மனித செயற்பாடுகள் முழுவது மிருகத் தனமானதாகவே அமையும் இதற்கு இலங்கை உட்பட எந்த நாடும் விதி விலக்கல்ல ஆதிகால மனிதன் மிருகக் குணத்துடன் இருந்ததாக அறியக் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இன்று வாழும் மனித கூட்டம் இதை விட ஆபத்தான கூட்டமாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது. மாறாக தடுக்க மனிதளால் மட்டுமே முடியும். |