பாகிஸ்தான் லாகூரில் பொதுமக்கள் கூடும் பூங்காவொன்றின் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 53 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நகரின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, நகர் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்போடு தேடுதல்கள் நடத்தப்படுகின்றன.