பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கும் முன்னாள் போராளி மீதான துப்பாக்கிச்சூடு

431

தமி­ழீழ விடு­த­லைப்­ பு­லிகள் இயக்­கத்தின் காவல் துறையில் பணி­யாற்­றிய குடும்­பஸ்­த­ரான மன்னார் வெள்ளாங்­குளம் கணே­சபு­ரத்தைச் சேர்ந்த கிருஷ்­ண­சாமி நகு­லேஸ்­வரன் (வயது40) என்ற குடும்­பஸ்தர் கடந்த புதன்­கி­ழமை இரவு 8.30 மணி­ய­ளவில் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்ளார்.

இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான இவர் தனது வீட்டில் இருந்­த­போது அங்கு வந்த ஆயு­த­தா­ரிகள் அவரை அழைத்து சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.

தமிழ் தேசி­யக்­  கூட்­ட­மைப்பின் தீவிர ஆத­ர­வா­ள­ரான கிருஷ்­ண­சாமி நகு­லேஸ்­வரன் விடு­த­லைப்­  பு­லி­களின் காவல்­து­றையில் நீண்­ட­காலம் கட­மை­யாற்­றி­யவர்.

யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்த இவர் அர­சாங்­கத்­தினால் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட நிலையில் 2012ம் ஆண்டு சமூ­கத்­துடன் இணைத்­துக்­கொள்­ளப்­பட்டார்.

அன்று முதல் உயி­ரி­ழக்கும் வரை சுய­தொழில் மேற்­கொண்டு வந்த இவர் தமிழ் தேசி­யக் ­கூட்­டமைப்பின் ஆத­ர­வா­ள­ரா­கவும், செயற்­பட்டு வந்தார். இந்த நிலை­யி­லேயே இவர் மீது துப்­பாக்­கிப்­ பி­ர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

வடக்கில் நீண்­ட­கா­ல­மாக வன்­மு­றைச் ­சம்­ப­வங்கள் இடம்பெற்­றி­ருக்­க­வில்லை. அங்கு அமை­தி­யான சூழல் நில­வி­ வந்­தது.

தற்­போது புலி­களின் காவல்துறையில் கட­மை­யாற்­றிய தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் ஆத­ர­வாளர் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்­ளமை மன்னார் பகு­தியில் மக்கள் மத்­தியில் குறிப்­பாக தமிழ் மக்கள் மத்­தியில் பெரும் பதற்­றத்தை உரு­வாக்­கி­யுள்­ளது.

மீண்டும் வன்­முறை கலா­சாரம் தலை­தூக்­கி ­விட்­டதோ என்று மக்கள் அச்சம் கொள்ளும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

புனர்­வாழ்வு பெற்று சமூ­கத்­துடன் இணைந்த கிருஷ்­ண­சாமி நகு­லேஸ்­வரன் சுட்­டுக்­ கொல்­லப்­பட்­ட­மையை மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆண்­டகை வன்­மை­யாக கண்­டித்­துள்ளார்.

இச்­சம்­ப­வ­மா­னது கொடிய போரால் பாதிக்­கப்­பட்ட வடக்கில் மீண்டும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்த ஆயு­த­தா­ரிகள் முயற்­சிப்­ப­தையே எடுத்­துக்­காட்­டி­யுள்­ளது.

தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் தீவிர ஆத­ர­வா­ள­ரான நகு­லேஸ்­வரன் ஆயு­த­தா­ரி­க­ளினால் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து தமிழ் மக்கள் அச்­ச­ம­டைந்­துள்­ளனர்.

இந்­நாட்டில் இன்று நீதி தோற்­றுப்­போய்­விட்­டது. நீதிக்குப் புறம்­பான செயல்­கள்தான் இடம்பெற்று வரு­கின்­றன.

எனவே, சர்­வ­தேச சமூகம் இந்த அரா­ஜ­கங்­க­ளுக்கு உட­ன­டி­யாக முடி­வு­கட்ட வேண்டும் என்று மன்னார் மறை­மா­வட்ட ஆயர் கருத்து தெரி­வித்­துள்ளார்.

இதேபோல், புலி­களின் காவல்­து­றையில் பணி­யாற்­றிய முன்னாள் போரா­ளி­யான கிருஷ்­ண­சாமி நகு­லேஸ்­வரன் சுட்­டுக் ­கொல்­லப்­பட்­டுள்ள நிலையில் ஏனைய முன்னாள் போரா­ளி­களின் பாது­காப்­புக்கு இருக்கும் உத்­த­ர­வாதம் தான் என்ன என்று தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

2015ம் ஆண்­டுக்­கான வர­வு-­செ­லவுத் திட்­டத்தை சமர்ப்­பித்த ஜனா­தி­பதி தனது உரையின் போது முன்னாள் போரா­ளிகள் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவர்கள் சுதந்­தி­ர­மாக வாழ்க்கை நடத்­து­வ­தாக கூறினார். ஆனால், தற்­போது முன்னாள் போராளி ஒருவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்ளார்.

இந்த நிலையில் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட ஏனைய போரா­ளி­களின் பாது­காப்­பிற்கு உத்­த­ர­வாதம் இல்­லாது போயுள்­ளது. புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்­டுள்ள போதிலும், அவர்கள் மீண்டும் கைது செய்­யப்­ப­டு­கின்­றனர்.

தேர்தல் ஒன்று நெருங்­கு­வதன் கார­ணத்­தினால் மீண்டும் புலிகள் உரு­வெ­டுத்­தி­ருப்­ப­தாக கூறு­வ­தற்­கான உத்­தி­யாக இந்த சம்­பவம் இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது என்றும் செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி. சபையில் விசனம் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் ­பி­ரே­மச்­சந்­திரன், நகு­லேஸ்­வ­ரனின் படு­கொ­லையால் முன்னாள் போரா­ளிகள், தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் ஆத­ர­வா­ளர்கள், மற்றும் தமிழ் தேசியப் பற்­றா­ளர்கள் ஆகி­யோரின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம் பெற்­ற­போதும் அதன் பின்­னரும் முன்னாள் புலிப்­ போ­ரா­ளிகள் மற்றும் புலிகள் அமைப்பின் காவல்­துறை,  நீதித்­து­றையில் பணி­யாற்­றி­ய­வர்­களும் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டனர்.

பெரு­ம­ள­வானோர் படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்­தி­ருந்­தனர். இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்குள் வந்த முன்னாள் போரா­ளி­களை சர­ண­டை­யு­மாறு படைத்­த­ரப்­பினர் அறி­வித்­தி­ருந்­தனர். இதனை அடுத்து ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் சர­ண­டைந்­தனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்டோர் மற்றும் சர­ண­டைந்­தோரில் 12 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் புனர்­வாழ்வு முகாம்­களில் அடைக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு புனர்­வாழ்வு வழங்­கப்­பட்­டது.  இவ்­வாறு புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளிகள் 12 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்டோர் சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் தொடர்ந்தும் மார்­தட்டி வரு­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளிகள் பல்­வேறு வித­மான அச்­சு­றுத்­தல்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். புனர்­வாழ்வின் பின்னர் சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்ட போதிலும், அவர்கள் தொடர்ந்தும் படைத்­த­ரப்­பி­னரால் கண்­கா­ணிக்­கப்­பட்டே வரு­கின்­றனர். அவர்கள் மீது சந்­தேகக் கண்­கொண்டே பார்க்­கப்­ப­டு­கின்­றது.

புனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போரா­ளிகள் தமது வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் பெரும் திண்­டாட்­டங்­களை சந்­தித்து வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கு­வ­தற்கும் தொழில்­த­ரு­னர்கள் அஞ்­சு­கின்­றனர். இதனால் உரிய வேலை­வாய்ப்­புக்கள் இன்றி வரு­மானம் இன்றி இவர்கள் பெரும் கஷ்­டங்­களை அனு­ப­விக்­கின்­றனர்.

இவ்­வா­றான கஷ்டம் ஒரு­பக்கம், படைத்­த­ரப்­பி­னரின் சந்­தே­கப்­பார்வை மறு­பக்கம் என இவர்கள் சொல்­லொண்­ணாத்­து­ய­ரத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில் முன்னாள் போரா­ளி­யான நகு­லேஸ்­வரன் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளமை புனர்­வாழ்வு பெற்ற போரா­ளிகள் அனைவர் மத்­தி­யிலும் பெரும் கலக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் ஆத­ர­வா­ள­ரான நகு­லேஸ்­வரன் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்டும். இந்த சம்­ப­வத்தின் பின்­னணி குறித்தும் விசா­ரிக்­கப்­ப­ட­வேண்டும். விசா­ரித்து குற்­ற­மி­ழைத்­த­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டு­வதன் மூலமே முன்னாள் போரா­ளி­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அச்­சத்தை ஓரள­விற்­கேனும் போக்க முடியும்.

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு விசா­ரணை நடத்தி வரு­கின்­றது.

இலங்­கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய வகையில் உள்­ளக விசா­ரணை நடத்­தப்­ப­டா­மை­யி­னா­லேயே சர்­வ­தேச விசா­ரணை ஒன்று இடம் பெறு­வ­தற்­கான சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அர­சாங்கம் அமைத்த நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வா­னது இலங்­கையில் இடம்பெற்ற மனித உரி­மை­மீ­றல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை நடத்­து­மாறு பரிந்­துரை செய்­தி­ருந்­தது.

ஆனால், இவ்­வாறு சர்­வ­தேச சமூ­கத்தின் நம்­பிக்­கையை பெறக்­கூ­டிய விசா­ர­ணைகள் இடம்பெறா­மை­யி­னா­லேயே இன்று ஐ.நா. விசா­ரணை நடை­பெற்று வரு­கின்­றது.

இவ்­வா­றான விசா­ரணை நடை­பெற்று வரும் நிலையில் இலங்­கையில் மீண்டும் முன்னாள் போராளிகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படுவதென்பது பாரதூரமான விடயமேயாகும்.

இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் உணர்வுகளை மழுங்கடிப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகமும் தற்போது எழுகின்றது.

நாட்டில் இத்தகைய வன்முறைகள் தொடருமானால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழல் சீர்கெடும் நிலையே ஏற்படும்.  அத்துடன் தமிழ், சிங்கள மக்களிடையே ஏற்பட்டு வரும் புரிந்துணர்வுக்கும் இவ்வாறான செயற்பாடுகள் பாரதூரமான பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

எனவே, இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் இடம்பெற அனுமதிக்கக் கூடாது. இந்த துப்பாக்கிச் சூட்டின் மூலம் முன்னாள் போராளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை களைவதற்கு துரிதகதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

 

SHARE