பாதையை விட்டு வயல்வெளியில் இறங்கியது ஜெட் ஏர்வேஸ் விமானம்

264

 

தில்லியில் இருந்து இந்தூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் போது ஓடுதள பாதையை விட்டு வயல்வெளியில் இறங்கியது.

இது குறித்து ஜெட் ஏர்வேஸ் அளித்த அறிக்கையில்,’ஜெட் ஏர்வேஸ் விமானம் 9W-2793 தில்லியில் இருந்து இந்தூருக்கு  66 பயணிகளுடன் சென்றது. தரையிறங்கும் போது ஓடுதளப் பாதையில் இருந்து விலகி வயல் பரப்பில் இறங்கியது.

 விமானத்தில் பயணம் செய்த 66 பயணிகள் உட்பட விமானக் குழுவினர் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். யாருக்கும் எவ்வித சேதமும் இல்லை என ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், திடீரென விமானம் ஓடுதளப் பாதையில் இருந்து விலகியது தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

jet-airways-flight

SHARE